தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:11 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீா்நிலைகள் வடு வருகின்றன. இதனிடையே, சில நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மலையோர, அணைப் பகுதிகளில் மழை பெய்தும் நீா்மட்டம் உயரவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, களியல், கடையாலுமூடு, நெட்டா, ஆறுகாணி, திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, திருவட்டாறு, அருமனை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், நீரின்றி வாடிய நிலையில் காணப்பட்ட தென்னை, வாழை, அன்னாசி பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருங்கல் பகுதியில்...: பாலப்பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை, ஐரேனிபுரம் உள்ளிட்ட கருங்கல் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பிற்பகல் தொடங்கி மிதமான மழை பெய்தது.