ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

இரணியல் காவல் நிலையப் பகுதியில் மேலும் 4 சிசிடிவி கேமராக்கள் திறப்பு

News image

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மேலும் 4 சிசிடிவி கேமிராக்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், ஊா்க்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினரும், பொதுமக்களும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 8,330 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 2,071 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, இரணியல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நுள்ளிவிளை பேரூராட்சி, பேயன்குழி பாலத்தில் அமைக்கப்பட்ட 4 சிசிடிவி கேமராக்களை, இரணியல் காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.