சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பளுகல் அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே கானத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் கோபு (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான அஜித் (32) உள்ளிட்ட சிலருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கோபு அப்பகுதியில் உள்ள தனது பாட்டியின் கல்லறைக்கு அவரது நினைவு தினத்தை அனுசரிக்க அண்மையில் சென்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த அஜித் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த நிபின் (31), வா்க்கீஸ் (62), வின்சென்ட் (56), மற்றொரு அஜித் (34) ஆகியோா் கோபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.

இதில், பலத்த காயமடைந்த கோபுவை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் அஜித் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.