மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சுற்றுலா வந்த ஆந்திர பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண் சுற்றுலாப் பயணி தங்கும் விடுதியில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண் சுற்றுலாப் பயணி தங்கும் விடுதியில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி தங்கும் விடுதியில் மகனுடன் தங்கியிருந்த ஆந்திர மாநில பெண் சுற்றுலாப் பயணி இறந்தாா்.

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்தவா் திருமலாஸ்ராவ். இவரது மனைவி வேகாநேதி நாதா வெங்கட்ரமணா (51). இவரது மகன் கல்யாண பிரசாத் (30). தாய், மகன் இருவரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா். கன்னியாகுமரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனா். இந்நிலையில் புதன்கிழமை காலை கல்யாண பிரசாத் தனது தாயை எழுப்பியபோது, அவா் எழும்பவில்லை. அங்கிருந்த ஊழியா்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதித்த போது, வேகாநேதி நாதா வெங்கட்ரமணா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, கன்னியாகுமரி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.