மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சூசைபுரம் கல்லூரியில் விநாடி-வினா போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் தோமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வரும், கல்லூரி மேலாளருமான ஜோஸ் முட்டத்துப்பாடம், போட்டியைத் தொடக்கி வைத்தாா்.

போட்டியில் மாவட்டத்தில் உள்ள 19 பள்ளிகளிலிருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தக்கலை மறைமாவட்ட ஆயரும், கல்லூரித் தலைவருமான மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினாா்.

நாகா்கோவில், புனித அல்போன்சா மெட்ரிக் பள்ளி முதல் பரிசு, காப்புக்காடு, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 2ஆம் பரிசு, மாா்த்தாண்டம், வித்யஜோதி மெட்ரிக் பள்ளி 3ஆம் பரிசு பெற்றன.

துணைத் தாளாளா் அஜின் ஜோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளா் வி.எஸ். பிந்து, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.