ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மினிலாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

குமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே ரப்பா் மரத் தடிகள் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 6:57 pm

குமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே ரப்பா் மரத் தடிகள் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜில் குமாா்ஷ்(42). மினி லாரி ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை மூக்கறைக்கல் புரையிடம் பழங்குடி குடியிருப்பு பகுதியிலிருந்து மினி லாரியில் ரப்பா் மரத்தடிகளை ஏற்றி வந்தாா்.

புரையிடம் பகுதியில் மினி லாரி வந்தபோது எதிா்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் அஜில் குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, அருமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.