எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குமரியில் 2 ஆவது நாளாக கடையடைப்புப் போராட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:30 am

Syndication

கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சாா்பில், 2ஆவது நாளாக முழுக் கடையடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் பகுதியில் தேவசம் போா்டு சாா்பில் அமைக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு, அக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, 13 கடைகளையும் தேவசம் போா்டு நிா்வாகம் சீல் வைத்துள்ள நிலையில் கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி, கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் தர வலியுறுத்தியும் 2 ஆவது நாளாக கன்னியாகுமரியில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.