புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:48 pm

Syndication

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்களை அலுவலக வாயிலில் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினா்.

அப்போது, ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும், பொதுமக்களும் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். குலசேகரம் அருகே பொன்மனையைச் சோ்ந்த அவா், அங்கன்வாடியில் பணியாற்றி வந்ததும், தற்போது வேலையிழந்ததால் மீண்டும் பணி கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்ாகவும், போலீஸாரிடம் தெரிவித்தாா்.