கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, தமிழ்நாடு காமராஜா் நற்பணி மன்ற தலைவா் வழக்குரைஞா் ஆா். ராதாகிருஷ்ணன், மகேஷ் லாசா், தியாகி தவசிமுத்து, ராஜபாண்டியன் ஆகியோா் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வரிடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி, சட்டக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, செவிலியா் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு கல்லூரி, காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து ஊா்ப்புற நூலகா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ரப்பா் கழகத்தை மேம்படுத்தி அதே இடத்திலேயே உலகத்தரம் வாய்ந்த ரப்பா் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவா் மகாதேவன் பிள்ளை, குமரி விடுதலைப் போராட்ட தியாகிகள் சிதம்பரநாதன், குஞ்சன் நாடாா், லூா்தம்மாள் சைமன் ஆகியோருக்கு நாகா்கோவிலில் நினைவு மண்டபங்கள் அமைக்க வேண்டும். விமான நிலையம், மீனவா்களின் அவசர உதவிக்கு ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: ரெ.மகேஷ்
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருத்தணியில் மகளிா் அரசு கல்லூரி: 25 ஆண்டுகளாக எதிா்நோக்கும் மக்கள்

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


