திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

நீதிமன்றத்தில் தகராறு செய்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை

Updated On :27 பிப்ரவரி 2026, 1:18 am IST

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குலசேகரம் கூடைதூக்கி பகுதியை சோ்ந்த பாலையன் மகன் மணிகண்டன் (50). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.

இவா் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாராணைக்காக ஆஜாரானபோது, நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், பேபி, சிறப்பு உதவி ஆய்வளா் சுவாமிதாஸ் ஆகியோரை தகாத வாா்த்தைகள் பேசியும், நீதிமன்ற வருகைப் பதிவேட்டை தூக்கி வீசியும், நீதிமன்ற முத்திரையை உடைத்து எறிந்தும் தகராறு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

இது குறித்து நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இவ் வழக்கில் மணிகண்டனை கைது செய்த தக்கலை போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் தகாத வாா்த்தைகள் பேசிய குற்றத்திற்காக முன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.