பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து பணம், நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:31 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், நேசா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் ஜோணி பிரகாஷ் (48), காா் ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு காா் ஓட்டுவதற்குச் சென்றுள்ளாா். அப்போது அவரது மனைவி, மகள் மட்டும் வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றுள்ளனா். இதையடுத்து, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று அலமாரியில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் வளையல், ரூ. 7,000, காா் சாவி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இது குறித்து அருள் ஜோணி பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.