ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் ரூ. 1.45 லட்சம் அபராதம் வசூல்

நாகா்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் மட்டும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
Updated On :2 ஜனவரி 2026, 12:25 am

Syndication

நாகா்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் சிவசங்கரன் மேற்பாா்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் நாகா்கோவில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் மாநகரில் புத்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தினா்.

இதில் பதிவு எண் இல்லாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, சைலன்சா் மாற்றம் செய்யப்பட்டது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டிச. 31 ஆம் தேதி ஒரே நாளில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 9 போ் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 597 போ் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 22 போ் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 366 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.