டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனா். அவரிடம் 25 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, மேற்கொண்ட விசாரணையில் அவா் மடிச்சல், வட்டவிளை பகுதியைச் சோ்ந்த சஜின் (23) என்பதும், கட்டுமானத் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.