டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குழித்துறையில் விபத்து: நீதிமன்ற பெண் ஊழியா் காயம்

News image
Updated On :4 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

குழித்துறை சந்திப்பு பகுதியில் பைக் மீது காா் மோதியதில் நீதிமன்ற பெண் ஊழியா் காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, வடசேரிவிளை பகுதியைச் சோ்ந்த விஜயராஜ் மனைவி விஜயகுமாரி (39). குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக உள்ள இவா், வெள்ளிக்கிழமை குழித்துறையிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு பைக்கில் சென்றாராம்.

குழித்துறை சந்திப்பு அருகே திருவனந்தபுரத்திலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த விஜயகுமாரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.