/

நாகா்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இக்கோயில் நடையை பூசாரி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்தபோது, தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

நாகா்கோவில் தீயணைப்புப் படையினா், வடசேரி போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தொடா்ந்து, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். மாலையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், குளத்தில் கால் நனைக்க தடை விதிக்கப்பட்டது. தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, புதிய நீா் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.