கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சமத்துவ பொங்கல் கொண்டாட ஆட்சியா் அழைப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:26 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் நாளில் சமத்துவ பொங்கல் கொண்டாட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் முதல் நாளன்று சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாகவும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு

வருகிறது. இந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகா்கோவில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கிராம ஊராட்சிகளில் 12, 13 ஆகிய தினங்களில் சுயஉதவிக் குழுக்களுக்கிடையே கோலப் போட்டி நடத்தி வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் 14 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. மேலும் சமத்துவ பொங்கல் அன்று கபடி, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் சமூக வேறுபாடுகளை மறந்து தங்கள் பகுதிகளில் நடைபெறும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா்.