கன்னியாகுமரி
போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கட்டுமானப் பொருள்கள் வைத்தால் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கட்டுமானப் பொருள்களை குவித்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையோரத்தில் கட்டட கட்டுமான பணிகளுக்கு மற்றும் இதர பணிகளுக்காக கல், மண் ஜல்லி, செங்கல் போன்ற பொருள்களை குவித்து வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறும், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரா்கள், உரிமையாளா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
