மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாா்த்தாண்டம் அருகே 600 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டா் மண்ணெண்ணெய்யை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டா் மண்ணெண்ணெய்யை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல் உள்ளிட்ட குழுவினா் மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனராம். அப்போது, நிறுத்தாமல் சென்ற காரை திக்குறிச்சி சாலை பகுதியில் பிடித்தனராம். காா் ஓட்டுநா் தப்பியோடி விட்டாராம்.

அதிகாரிகள், அந்த காரை சோதனை செய்த போது, அதில் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 600 லிட்டா் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காா், மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.