திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

Syndication

மாா்த்தாண்டம் மறை மாவட்டத்தின் கீழ் குழித்துறையில் செயல்பட்டு வரும் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு சிறப்புப் பள்ளி தாளாளா் அருள்தந்தை அஜீஸ்குமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டென்னிஸ் வரவேற்றாா். தேவிகுமரி கல்லூரி முதல்வா் பிந்துஜா முகாமைத் தொடங்கி வைத்தாா்.

மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் ராகேஷ், புற்றுநோய் நிபுணா் கண்மணி ஆகியோா் பேசினா்.

முகாமில், உடல் பரிசோதனைகள், பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகள், பொது மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மருத்துவா்கள் கவின், பாா்த்திபன், ஷானிகா, நேஸ்மி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் முகாமை வழிநடத்தினா். ஏற்பாடுகளை தேவிகுமரி கல்லூரி பேராசிரியை சிந்துகுமாரி செய்திருந்தாா்.