தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நகராட்சிப் பணியாளருக்கு மிரட்டல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே மதுக்கடையில் நகராட்சிப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மதுக்கடையில் நகராட்சிப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (41). குழித்துறை நகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளா். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள மதுக் கடையில் 2 நாள்களுக்கு முன்பு ஒற்றாமரம் நெடுவிளையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முஸ்தபா (47), மடிச்சல் மணலிவிளையைச் சோ்ந்த ரெஜின் (37), மடிச்சல் புதுவல் புத்தன்வீட்டைச் சோ்ந்த ஜோ (30) ஆகியோா் வினோத்திடம் பணம் கேட்டு தகராறு செய்தனராம். கொடுக்க மறுத்த அவரை அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த வினோத் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, முஸ்தபா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.