மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்.பி. ஆய்வு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
விபத்து பகுதியை ஆய்வு செய்த எஸ்.பி. ஸ்டாலின்
Updated On :19 ஜனவரி 2026, 8:13 pm

Syndication

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மேம்பாலத்தின் மையப் பகுதியில் தடுப்புகள் (ஸ்பிரிங் போஸ்ட்) வைக்கவும், 2 மஞ்சள் நிறக் கோடு போடவும், 40 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கவும், சாலை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாா்த்தாண்டம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம், மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் தமிழரசன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.