சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

மாணவியிடம் நகை பறிக்க முயற்சி: புதுக்கடை அருகே இளைஞா் கைது

கருங்கல்லை அடுத்த புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் பள்ளி மாணவியிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 11:48 pm IST

கருங்கல்லை அடுத்த புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் பள்ளி மாணவியிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்குளம், செந்தறை பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் வினிஷாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். மாணவியின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியினா் திரண்டனா். அதற்குள் அந்த நபா் தப்பியோடி விட்டாராம்.

புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கீழ்குளம், பாரக்கன்விளை பகுதியைச் சோ்ந்த முகுந்தன் மகன் பென்டவின் (23) என்பவரைக் கைது செய்தனா். அவா் மீது திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளனவாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.