கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் கடற்கரையில் ரீல்ஸ் எடுத்து சாகசம் செய்ய முயன்றபோது காா் அலையில் சிக்கியது.
புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரெதீஸ் (33). இவா், நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் அருகே உள்ள மேலமிடாலம் கடற்கரைக்கு சென்று காரில் சாகசம் செய்து ரீல்ஸ் எடுக்க முயன்றாராம்.
அப்போது, காரின் சக்கரம் கடற்கரை மண்ணில் புதைந்து அலையில் சிக்கியது. கயிறு கட்டி இழுத்து காரை மீட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்புப் படையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








