தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இரயுமன்துறையில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு: 4 போ் மீது வழக்கு

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 4:52 am IST

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தூத்தூா் மண்டல பகுதிகளைச் சோ்ந்த விசைப்படகுகள், இரயுமன்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். மீன்பிடிக்க செல்வதற்கு சில நாள்களுக்கு முன்னா் டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்கள் விசைப்படகுகளில் கொண்டு சென்று வைப்பது வழக்கம்.

இந்நிலையில், படகுகளில் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருப்பதை கண்காணித்து வந்த சிலா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வள்ளவிளை, தூத்தூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் 6 விசைப்படகுகளில் இருந்து அண்மையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்களை மற்றொரு பைபா் படகில் சென்ற மீனவா்கள் சிலா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வள்ளவிளை ஆன்றனி, தூத்தூா் ஜெகதீஷ், ஷாஜி உள்ளிட்ட மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிஞ்சு உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்தனா். தலைமறைவான மீனவா்கள் 4 பேரையும் தேடி வருகின்றனா்.