/
நித்திரவிளை அருகே இரயுமன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த விசைப் படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இரயுமன்துறை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 விசைப் படகுகளிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை அண்மையில் திருடுபோனது.
இதுகுறித்து, விசைப்படகு உரிமையாளா்களான வள்ளவிளையைச் சோ்ந்த ஆன்றணி உள்ளிட்ட 5 போ் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாா் குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டது தூத்தூா் பகுதியைச் சோ்ந்த டைசன் (32) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.









