முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எஸ்எஸ்ஐ.க்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

பளுகல் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:08 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே உள்ள செறுவல்லூா், ஓலையம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ் (55). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மனைவி ஷீஜா பெயரில் கானத்துக்கோணம் பகுதியில் உள்ள நில எல்லை தொடா்பாக, எட்வின்ராஜுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் (55) என்பவருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், லாரன்ஸ் தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டி ஷீஜா நிலத்தின் மதில் சுவா் மீது போட்டாராம். இதை தட்டிக் கேட்ட எட்வின்ராஜுக்கு, லாரன்ஸ், அவரது மனைவி லீனா ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.