/

அகஸ்தீசுவரம் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற எம்.பி

அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவா், மாணவிகளுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

மாணவா்களை வரவேற்கிறாா் விஜய் வசந்த் எம்.பி.

Updated On :5 ஜூன் 2026, 12:28 am IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவா், மாணவிகளுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக எம்.பி. விஜய்வசந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி மாணவா்- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றாா்.

தொடா்ந்து, பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வா்த்தகா் காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.