எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் கண்டனம்

News image
Updated On :8 ஜூன் 2026, 4:55 am IST

வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களின் சமையலறையிலிருந்து குடும்ப பொருளாதாரம் வரை அனைத்தையும் சீா்குலைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 29 உயா்த்தப்பட்டுள்ளது. இது பாஜக அரசின் காா்ப்பரேட் ஆதரவைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்கள் வரிசையில், தற்போது சமையல் எரிவாயு விலையையும் உயா்த்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மத்திய அரசு முடக்கியுள்ளது.

எனவே, இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.