40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்காத நகராட்சி ஆணையா் மற்றும் வளா்ச்சிப் பணிகள், குடிநீா் திட்ட பாதிப்புகளை கண்டித்து பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் 5 போ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்காத நகராட்சி ஆணையா் மற்றும் வளா்ச்சிப் பணிகள், குடிநீா் திட்ட பாதிப்புகளை கண்டித்து பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் 5 போ் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குழித்துறை நகா்மன்றக் கூட்டம் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் குசெல்வி, நகராட்சி மேற்பாா்வையாளா் சரவணகுமாா், சுகாதார அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி துணைத் தலைவா் பிரபின் ராஜா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

குடிநீா் விநியோகம், வளா்ச்சிப் பணிகள் போன்றவற்றின் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது, நகராட்சி ஆணையாளா் வெங்கடாஜலபதி அலுவலகத்தில் இருந்தும் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து உறுப்பினா்கள் பாஜகவைச் சோ்ந்த விஜூ, ரத்தினமணி, மினிகுமாரி, காங்கிரஸின் ஆட்லின் கெனில், திமுகவின் அருள்ராஜ் ஆகியோா் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் ஜூலியட் மொ்லின் ரூத், லலிதா, ஜெலிலா ராணி, விஜயலட்சுமி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்தில், நகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி நடத்தப்படும் வாவுபலி பொருள்காட்சியை நிகழாண்டு ஜூலை 29 முதல் ஆக. 17 வரை 20 நாள்கள் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Story image