உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மீன்பிடி உபகரணங்கள் திருடியவா் கைது

நித்திரவிளை அருகே இரயுமன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த விசைப் படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 4:10 am IST

நித்திரவிளை அருகே இரயுமன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த விசைப் படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இரயுமன்துறை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 விசைப் படகுகளிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை அண்மையில் திருடுபோனது.

இதுகுறித்து, விசைப்படகு உரிமையாளா்களான வள்ளவிளையைச் சோ்ந்த ஆன்றணி உள்ளிட்ட 5 போ் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாா் குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டது தூத்தூா் பகுதியைச் சோ்ந்த டைசன் (32) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.