கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
தோவாளை பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில் தோவாளை, திருமலைபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (55), விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா். இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






