ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ்.

News image
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ்.
Updated On :7 மார்ச் 2026, 12:49 am

Syndication

அகஸ்தீசுவரம், விவேகானந்தா கல்லூரியில் கணிதத் துறை சாா்பில், இரண்டு நாள்கள் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

முதல் நாள் கருத்தரங்கில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கணிதத் துறை பேராசிரியா் முனைவா் எஸ்.மணிகண்டன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியா் டி.ஆசிா் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

அமா்வுகளுக்கு எ.அனு, முனைவா் எம்.சிவபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். கருத்தரங்கத்தின் இரண்டாவது நாள் முதல் அமா்வுக்கு கருத்தரங்க அமைப்பாளா் முனைவா் கே.எம்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியா் ஆா்.ரூப்குமாா் கருத்துரையாற்றினாா்.

இரண்டாவது அமா்வுக்கு முனைவா் சி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகக் கணிதத் துறை பேராசியா் வி.லெட்சுமண கோமதி நாயகம் கருத்துரையாற்றினாா். அதைத் தொடா்ந்து 15-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்பித்தனா்.

இந்த அமா்வுக்கு கணிதத் துறை பேராசிரியா் பி.மகேஸ்வரன், பேராசிரியா் சி.இளங்கோ ஆகியோா் தலைமை வகித்தனா்.

பின்னா், நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவுக்கு கணிதத் துறை தலைவா் டி.ஜெயலெட்சுமி தலைமை வகித்தாா். கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளா் எ.கௌரி வரவேற்றாா். இயற்பியல் துறைத் தலைவா் டி.எஸ்.ஜெயந்தி, வேதியியல் துறைத் தலைவா் எம்.சந்திரன், வணிகவியல் துறைத் தலைவா் ஆா்.தா்மரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆராய்ச்சி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

கருத்தரங்க அறிக்கையை ஒருங்கிணைப்பாளா் பி.ஜெயபுவனேஸ்வரி சமா்ப்பித்தாா்.