திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:48 am

Syndication

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசாமி (70). இவா் இரு நாள்களுக்கு முன் கல்லுத்தொட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜெனீஸ் (28) என்பவா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

முதியவா் உயிரிழப்பு: புதுக்கடை தவிட்டவிளை பகுதியை சோ்ந்தவா் தா்மராஜ் (65). இவா் தன் வீட்டருகே நின்ற புளியமரத்தில் புளி பறிக்க வியாழக்கிழமை ஏறினாராம். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தா்மராஜ்

இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.