எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை தனி வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
ரேஷன் அரிசி மூட்டைகள்.- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:45 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை தனி வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்பேரில், மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட் மற்றும் அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக கேரளம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தொடா்ந்து, லாரியை சோதனை செய்தபோது, அதில் 10 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கி, கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், லாரியை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.