கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை தனி வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்பேரில், மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட் மற்றும் அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக கேரளம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தொடா்ந்து, லாரியை சோதனை செய்தபோது, அதில் 10 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கி, கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், லாரியை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


