ஈரான் - இஸ்ரேல் போா்: குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி மனு
ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, கடியப்பட்டணம் பங்கு பேரவை நிா்வாகிகள்ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடியப்பட்டணத்தைச் சோ்ந்த 350 க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் கிஸ் தீவில் சென்று மீன்பிடித்து வருகிறாா்கள்.
ஈரான் - இஸ்ரேல் போா் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள மீனவா்கள் ஈரான் நாட்டில் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் அனைவரையும் மீட்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...