அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நாகா்கோவிலில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:26 pm

நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் மாதவன், கிருஷ்ணகுமாா், சபீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் பிரேம்குமாா், துணைச் செயலா் ராம்சன், சாலமன், செயற்குழு உறுப்பினா் நிகேஷ், இளைஞரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image