தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் மனைவிக்கு அரசுப் பணி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

சென்னையில் பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்தில் நடத்துனரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.ஜெகன்குமாா், சென்னை, வியாசா்பாடி பணிமனையில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்து வந்தாா். இவா், 24.10.2024இல் பணியிலிருந்த போது பயணி தாக்கியதில் உயிரிழந்தாா்.

அவரது மனைவி எம்.ஆா்.சோனாவுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையேற்று, முதல்வரின் உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்து கழகம் நாகா்கோவில் மண்டலத்தில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநா் எஸ்.நடராஜன், பொதுமேலாளா் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளா் (வணிகம்) ஆா்.இ.மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.