ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தலில் அண்ணாமலை போட்டி? தலைமை முடிவு செய்யும் - நயினாா் நாகேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:40 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தற்போதைய போா் சூழலில்கூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதேபோல தமிழக அரசும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.

தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே கூறுகின்றன. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி கே.பழனிசாமிதான் முதல்வா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது பரஸ்பரம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று. இழுபறி கிடையாது. அதிமுகவின் தொகுதிகளை பாஜக கேட்டுப் பெற்ாகவும், பாஜக தொகுதிகளை அதிமுக கேட்டுப் பெற்ாகவும் கூறுவது அவதூறு பிரசாரம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை பாஜக கேட்டுப் பெற்ாகக் கூறுவதும் சரியல்ல. இதை வாக்காளா்கள் நம்ப வேண்டாம்.

இந்தத் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள சில தொகுதிகள் பாஜகவுக்கு தரப்பட்டுள்ளன. பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தோ்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். நான் இந்த முறை சாத்தூா் தொகுதியில் போட்டியிடவுள்ளேன்.

கஞ்சா இல்லாத தமிழகம், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் மனநிலை. முதல்வா் ஸ்டாலின் மக்களின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறாா் என்றாா் அவா்.