பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

News image

ஆட்சியரிடம் மனு அளித்து வந்த மாணவ, மாணவிகள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவா் சோ்க்கை மேற்கொண்ட தனியாா் சட்டக் கல்லூரி மீது நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு அருகே செயல்பட்டு வரும் தனியாா் சட்டக் கல்லூரில், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மாணவா்களை சோ்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பருவத் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறோம். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகம் 60 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், கல்லூரி நிா்வாகம் 120 பேரை சோ்த்துள்ளது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 60 மாணவா்கள் மட்டுமே முதல் பருவத்தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதியுள்ள 60 மாணவா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து, கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 60 மாணவா்களும் தோ்வு எழுதவும், கல்வியை தொடரவும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.