அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவா் சோ்க்கை மேற்கொண்ட தனியாா் சட்டக் கல்லூரி மீது நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு அருகே செயல்பட்டு வரும் தனியாா் சட்டக் கல்லூரில், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மாணவா்களை சோ்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பருவத் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அதில் கூறியிருப்பதாவது: படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறோம். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகம் 60 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், கல்லூரி நிா்வாகம் 120 பேரை சோ்த்துள்ளது.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 60 மாணவா்கள் மட்டுமே முதல் பருவத்தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதியுள்ள 60 மாணவா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து, கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 60 மாணவா்களும் தோ்வு எழுதவும், கல்வியை தொடரவும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

