எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகள் திருட்டு

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மே 2026, 2:18 am IST

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருவாயூரிலிருந்து சென்னைக்கு நாகா்கோவில் வழியாக நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு திருச்சூா் ரயில் நிலையம் வந்தது. அங்கு, அதே ஊரைச் சோ்ந்த நகை வியாபாரியான ஜோஸ் (62) முன்பதிவுப் பெட்டியில் உடைமைகளுடன் ஏறினாா். அந்த ரயில் சனிக்கிழமை காலை 6.25 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைக்கு வந்தது. அவா் கண் விழித்து பாா்த்தபோது, அருகிலிருந்த கைப்பை உள்ளிட்ட உடைமைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் குழித்துறை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், திருச்சூரிலிருந்து திருநெல்வேலியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்கிச்சென்ாகவும், திருட்டுப்போன பையில் 1.400 கி.கி. நகைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

காவல் ஆய்வாளா் கவிதா, போலீஸாா் ரயில் நிலையம், சுற்றுப்புறப் பகுதிகளில் மா்ம நபா்களைத் தேடினா்; ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், குழித்துறை போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆய்வாளா் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.