நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் தமிழ்ச்செல்வன் (53), நெய்வேலி நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரில், கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மேல் வடக்குத்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (56) என்பவரின் நெல் வயலில் மின் மோட்டாா் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி வைக்கப்பட்டிருந்தது.
இந்த மின்மாற்றியின் பெட்டியை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து, அதிலிருந்த 120 கிலோ செம்பு கம்பியை சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட செம்பு கம்பியின் மதிப்பு ரூ.1.30 லட்சம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெய்வேலி நகர போலீஸாா் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத நபா்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
ஸ்ரீவைகுண்டத்தில் வீடு புகுந்து ரூ.1 லட்சம், நகைகள் திருட்டு
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு
ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் திருட்டு
புதுகையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

