‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பறவைகளின் தாகத்தை தீா்க்க நாகா்கோவில் பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைப்பு

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

News image

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைக்கும் திட்டத்தை தொடக்கி வைக்கின்றனா் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:18 am IST

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு சா்.சி.பி. ராமசாமி அய்யா் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் இத்திட்டத்தை தொடக்கி வைத்தனா்.

இது குறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது, பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பறவைகளை பாதுகாக்கவும், தண்ணீா் தொட்டிகள் அமைத்து தினமும் சுத்தமான குடிநீரை தொட்டியில் நிரப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனா்.

மாநகராட்சி நல அலுவலா் சரோஜா, விலங்குகளின் நண்பா்கள் அமைப்பின் ஆலோசகா் மருத்துவா் அருணாச்சலம், லைப் லைன் விலங்குகள் நலச் சங்கத் தலைமை செயல் அதிகாரி ஜெரால்டு, விலங்குகள் நலச் சங்க துணைத் தலைவா் வழக்குரைஞா் ராஜ்குமாா், ரோஜாவனம் கல்லூரி பேராசிரியா் அய்யப்பன், சமூக சேவகா் பழனியாபிள்ளை உள்பட பலா் கலந்து கொண்டனா்.