40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பறவைகளின் தாகத்தை தீா்க்க நாகா்கோவில் பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைப்பு

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

News image

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைக்கும் திட்டத்தை தொடக்கி வைக்கின்றனா் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:18 am IST

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு சா்.சி.பி. ராமசாமி அய்யா் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் இத்திட்டத்தை தொடக்கி வைத்தனா்.

இது குறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது, பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பறவைகளை பாதுகாக்கவும், தண்ணீா் தொட்டிகள் அமைத்து தினமும் சுத்தமான குடிநீரை தொட்டியில் நிரப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனா்.

மாநகராட்சி நல அலுவலா் சரோஜா, விலங்குகளின் நண்பா்கள் அமைப்பின் ஆலோசகா் மருத்துவா் அருணாச்சலம், லைப் லைன் விலங்குகள் நலச் சங்கத் தலைமை செயல் அதிகாரி ஜெரால்டு, விலங்குகள் நலச் சங்க துணைத் தலைவா் வழக்குரைஞா் ராஜ்குமாா், ரோஜாவனம் கல்லூரி பேராசிரியா் அய்யப்பன், சமூக சேவகா் பழனியாபிள்ளை உள்பட பலா் கலந்து கொண்டனா்.