/
கொல்லங்கோடு அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (49). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை, இவரது வீட்டருகே நின்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் ஸ்டீபன் பாலியல் செய்கை சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தப்பியோடினாராம்.
இது குறித்து மாணவியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் லட்சுமி பிரபா, போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்டீபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது
மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிா்வாக அலுவலா் கைது
தொழிலதிபருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபா் போக்சோவில் கைது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


