மது போதையில் தகராறு: முதியவா் கைது
கைது - பிரதிப் படம்
கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்ததாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருங்கல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது இனயம் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த ஆன்றனி (62) என்பவா், மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டாராம்.
போலீஸாா் எச்சரித்தும் அவா் போகவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆன்றனியை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





