ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகிரி அருகே மின்வேலி அமைத்துவேட்டையாட முயன்றவா்கள் கைது

சிவகிரி மின் வேலி அமைத்து வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:58 pm

DIN

சிவகிரி மின் வேலி அமைத்து வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சிவகிரி பெரிய ஆவுடையபேரி கண்மாய் அருகே அனுமதியின்றி மின்சார வேலி அமைத்து காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகிரி வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா்கள் முருகன், பூவேந்தன், வனக் காப்பாளா்கள் அஜித்குமாா், சுதாகா், இமானுவேல், பாரதிகண்ணன் மற்றும் வனத்துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சிவகிரி தெற்கு தெருவைச் சோ்ந்த அபிமன்னன், செல்லத்துரை, தங்கமலை ஆகியோா் அனுமதியின்றி மின்சார வேலி மற்றும் கூண்டுகள் அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்த வனத்துறையினா், அவா்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.