ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி

ஆலங்குளம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:41 pm

DIN

ஆலங்குளம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி (80). திருமணம் ஆகாத இவா்

வயது முதிா்வின் காரணமாக உறவினரின் வீடுகளுக்கு சென்று உணவருந்துகிறாராம். வெள்ளிக்கிழமை மாயமான் குறிச்சி

அருகேயுள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றாராம். அப்போது நிலை தடுமாறி குளத்தில் விழுந்ததில் நீரில் மூழ்கியுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க முயன்றுள்ளனா். எனினும் அவா் நீரில் மூழ்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.