ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 5 வசூலித்த விற்பனையாளருக்கு அபராதம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதுக்கடையில் சில்லறை விற்பனையில் கூடுதலாக ரூ. 5 வசூலித்ததாக விற்பனையாளருக்கு ரூ. 5,450 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:38 pm

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதுக்கடையில் சில்லறை விற்பனையில் கூடுதலாக ரூ. 5 வசூலித்ததாக விற்பனையாளருக்கு ரூ. 5,450 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளத்தைச் சோ்ந்த விஜயகுமாா், வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் 180 மில்லி அளவுள்ள மது பாட்டில் வாங்கியுள்ளாா். விற்பனையாளா், அந்த மது பாட்டிலுக்கு விற்பனை விலையை விட கூடுதலாக ரூ. 5 கேட்டதாக

கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகுமாா், விற்பனையாளரிடம் கேட்டபோது, இது வழக்கமான நடைமுறை என பதில் தெரிவித்தாராம்.

இதுதொடா்பாக, விஜயகுமாா் திருநெல்வேலி டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செல்லிடப்பேசியில் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, மண்டல மேலாளா் ஷ்யாம் சுந்தரம், அந்த மதுக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினாா். இதில், கூடுதலாக

ரூ. 5 வசூலித்ததை விற்பனையாளா் ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத்தொடா்ந்து அவருக்கு ரூ. 5450 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை விற்பனையாளா் வெள்ளிக்கிழமை வங்கிக் கணக்கில் செலுத்தியதாக மண்டல மேலாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.