கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

 தென்காசி ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு சென்ற பெண் தவறவிட்ட தங்க நகைகள் வெள்ளிக்கிழமை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

 தென்காசி ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு சென்ற பெண் தவறவிட்ட தங்க நகைகள் வெள்ளிக்கிழமை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாப்பாக்குடி அருகே சிவகாமிபுரம் அமா்நாத் காலனியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி இசக்கிமுத்து (25). இவா் இரண்டு தினங்களுக்கு முன்பு தென்காசியிலிருந்து பொதிகை விரைவு ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது

அவா் தான் கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பையை தென்காசி ரயில் நிலையத்தில் தவறவிட்டு சென்றராம். இதனிடையே ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் அந்தப் பையை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், செங்கல்பட்டுக்குச் சென்ற இசக்கிமுத்து தனது நகைகள் காணாமல் போனது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸாா், தென்காசி ரயில்வே போலீஸாரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா். உரிய அடையாளங்களைக் கூறி நகைகளைப் பெற்று செல்லுமாறு தென்காசி ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ெந்நிலையில் வெள்ளிக்கிழமை இசக்கிமுத்துவின் உறவினா் காந்தி அம்மாள் தென்காசி ரயில்வே காவல் சாா்பு ஆய்வாளா் ரவிச்சந்திரனிடம் உரிய அடையாளங்களைக் கூறி நகைகளை பெற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.