கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் திங்கள்கிழமை சித்திரசபை, மற்றும் குற்றாலநாதசுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண

News image

ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

Updated On :20 டிசம்பர் 2021, 3:10 am

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் திங்கள்கிழமை சித்திரசபை, மற்றும் குற்றாலநாதசுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 5ம் நாளன்று தேரோட்டமும், 8ம் நாளன்று  சித்திரசபையில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவின் 10ம் நாளான திங்கள்கிழமையன்று  அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையிலும்,  குற்றாலநாத சுவாமி  கோயில் திரிகூட மண்டபத்தில் 5 மணிக்கும் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு  ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

Story image

விழாவில் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ.,  மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், குற்றாலம் வா்த்தக சங்க தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஸ்ரீதா், துணைத் தலைவா் வேல்ராஜ், இணைசெயலா் பண்டாரசிவன், உதவி செயலா் நாராயணன், தென்காசி ஒன்றிய திமுக செயலா் ராமையா, தொழிலதிபா் எம்ஆா்.அழகராஜா, ஓதுவாா் சங்கரநாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.

நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.