கடையநல்லூா்: உலக சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு கடையநல்லூா் அரசு சித்த மருத்துவமனையில், மூலிகை கண்காட்சி மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கடையநல்லூா் அரசு மருத்துமனை தலைமை மருத்துவா் தங்கசாமி தலைமை வகித்தாா். மனநல ஆலோசகா் நவாஸ்கான், எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் தாளாளா் முகைதீன்அப்துல்காதா் ஆகியோா் கலந்து கொண்டு மூலிகை மரக்கன்றுகளை நட்டனா்.
இதில் , சித்த மருத்துவத் துறையினா் மற்றும் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.